Thursday, May 08, 2008

ஐ.ஐ.டி. யில் தொலைதூரக் கல்வி


ஐ.ஐ.டி.க்குள் நுழைய முடியவில்லையா? மாணவர்கள் மனமுடைந்து விடவேண்டாம். தற்போது நீங்கள் தொலைதூரக் கல்வி வசதி மூலம் ஐ.ஐ.டி.யில் கலவி கற்கலாம்.

ஐ.ஐ.டி. உள்‌ளிட்ட முன்னணி தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் தற்போது தங்களது முதுகலைப் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் விரைவில் வழங்கவுள்ளது.

இதற்காக அயல் நாட்டு பல்கலைக் கழகங்கள் தொலைதூரக் கல்வியை எவ்வாறு நடத்துகின்றன என்பதை ஐ.ஐ.டி. ஆராய்ந்து வருகிறது.

இதற்கான மாதிரியை மத்‌திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதற்காக 7 ஐ.ஐ.டி. கூட்டிணைகிறது. பாடத் திட்ட அடிப்படையிலான இணையதள வகுப்புகள் மற்றும் வீடியோ ஆகியவற்றை ஒரு பரிசோதனை முயற்சியாக உருவாக்கியுள்ளது. இதற்காக 140 பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது இணையதளம் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வியில் டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த பாடத் திட்டங்களில் சேரலாம். மேலும் தொழில் நுட்ப இளங்கலை பல்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது முதுகலை படிப்பை இதன் மூலம் தொடரலாம் என்று மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வித் திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி வரும் தொலை தூரக் கல்விக் குழு (டி.இ.சி.) இந்த தொலைதூரக் கல்வித் திட்டத்தையும் கட்டுப்படுத்தும்.

அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி


சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராணுவ வல்லமையை வெளிப் படுத்தும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோ தனை, நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கவல்ல இந்த ஏவுகணை; அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் படைத்தது. அணுசக்தியில் இயங்கும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் தளத்தால், ஏற் பட்ட அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில், ஏவுகணை உற்பத்தியில், இந் தியா பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில், அக்னி -3 ஏவுகணை தயாரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணை, தரையில் இருந்து செலுத்தப்பட்டு, தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்க வல்லது. 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏவுகணையின் மொத்த எடை 48 டன்.

அதிகபட்சம் 1.5 டன் எடை கொண்ட குண்டை சுமந்து செல்லும். இந்த ஏவுகணையில் நவீன கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது ஏவுகணை செல்ல வேண்டிய வழித்தடத்தை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை இரண்டு அடுக்கு கொண்டது. உள் நாட்டு தொழில்நுட் பத்தில் உருவாக்கப் பட்டது. திட எரிபொருளில் இயங்க கூடியது. எனவே, இதை இந்தியாவின் எப்பகுதிக்கும் கொண்டு சென்று இயக்க முடியும். அக்னி -3 ஏவுகணை சோதனை, முதலில், 2006 ஜூலையில் நடந்து; அது தோல்வியில் முடிந்தது. அப் போது, ஏவுகணை செலுத்திய 65 வினாடிகளில், அது தன் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின், 2007 ஏப்ரல் 12ம் தேதி, அக்னி -3 ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தப் பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. ஏவுகணை செலுத்தப்பட்டு, இலக்கை தாக்கும் வரை 15 நிமிடங்களுக்கு, அதன் கட்டுப்பாடு விஞ்ஞானிகளிடம் இருந்தது. சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது முறையாக, அக்னி -3 ஏவுகணை சோதனை நேற்று மீண் டும் நடத்தப்பட்டது. ஒரிசா கடற்கரையில், பாலாசூரை ஒட்டியுள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலை 9.56 மணிக்கு, நடமாடும் லாஞ்சரில் இருந்து ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. ஆரஞ்ச் மற்றும் வெண் நிற புகையை கக்கியபடி, அக்னி -3 ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

விண்ணில் செலுத்தப்பட்ட உடன் 350 கி.மீ., உயரத்துக்கு சென்ற ஏவுகணை அதன் பிறகு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மிக வேகமாக பாய்ந்து சென்று அழித்தது. இதற்கு ஏவுகணை எடுத்துக் கொண்ட நேரம் 800 வினாடிகள். நாலாயிரம் டன் எடை கொண்ட ஒரு பொருள், மிக வேகமாக பாய்ந்து வந்து தாக்கினால், எந்த அளவுக்கு சேதம் ஏற்படுமோ, அந்த அளவுக்கு வேகமாக இந்த ஏவுகணை செயல்பட்டது. அக்னி -3 ஏவுகணை, மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. எனவே, சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நகரத்தைக் கூட தாக்க முடியும். சீனா தனது தென் கடற்கரை பகுதியில், அணு சக்தி திறன் படைத்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி காட்டப் பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ அமைச்சர் அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார். துவக்கத்தில் மூன்று முறை மட்டுமே அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதல் சோதனை தோல்வியில் முடிந்ததால், மேலும் பல சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனைகள் முடிந்த பிறகு, கடற்படையில் முறையாக, அக்னி -3 ஏவுகணை முறையாக சேர்க்கப்படும்.

Monday, May 05, 2008

உடற்பயிற்சிக்கு சில வழிகள்

எந்த வேலையும் உடற்பயிற்சி தான்!

"டாக்டர் சொல்லி விட்டார்; நான் எக்சர்சைஸ் பண்ணப்போறேன்' என்று, வாக்கிங் உடைகள், தொப்பி, பூட்ஸ் எல்லாம் வாங்குவர். அதிகாலையில் நடந்து விட்டு, கடைசியில் நொறுக்குத்தீனி, ஜூஸ் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவர். இதனால் ஒரு பயனும் இல்லை; அவர்கள் எதிர்பார்க்கும் கலோரி குறையாது. ரத்த அழுத்தமும் குறையாது. நடப்பதில் குறையும் கலோரி, யோகா செய்வதிலும் குறையும்; வீட்டு வேலைகளை செய்வதிலும் குறையும். ஆபீஸ் வேலை செய்யும் போதே உடற்பயிற்சி செய்யலாம். வீடு,ஆபீசில், வெளியிடங்களில், எப்படி உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்கலாம்?

இதோ சில வழிகள்:

* ஆபீசில் இருந்து பஸ்சில் திரும்பி வரும் போது, ஒரு ஸ்டாப் முன்னதாகவே இறங்கி வீட்டுக்கு நடந்து போங்கள்.

* அடுத்த தெருவுக்கு போவதற்கு கூட பைக்கை எடுக்காதீர்கள்; நடந்து போகலாமே.

* மாடிப்படி ஏறுவதற்கு லிப்டை பயன்படுத்தாதீர்கள்.

* மதிய உணவு சாப்பிட்டபின் சக ஊழியர்களுடன் நடந்து செல்லுங்கள்.

* தளர்ந்த உடைகளை பயன்படுத்துங்கள்; காற்று வாங்க வசதியாக இருக்கும்.

* பைலை ஆபீஸ் பையனிடம் தருவதற்கு பதில் நீங்களே கொண்டு போங்கள்.

* அரை மணிக்கு ஒரு முறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை எடுத்து விட்டு சற்று எழுந்து நிற்கலாம்; நடக்கலாம்.

* கண்களை ஒரு நிமிடம் மூடி, யோகா பயிற்சியில் செய்வது போல மேல்கீழாக, வலது இடமாக, சுழற்றவும். தோள்களை, காதில் இடிக்கும் படி உயர்த்தி தளர்த்தவும்.

* இருக்கையில் இறுக்கமாக உட்காராமல் சாதாரணமாக உட்கார்ந்து வேலை செய்யுங்கள்.

* இருக்கையில் உட்கார்ந்த நிலையில், வலதுகையை நீட்டுங்கள்; இடது கையை நீட்டி, வலது உள்ளங்கையுடன் சேருங்கள்; நீட்டி பின், மணிக்கட்டை மேலும் கீழுமாக அசையுங்கள். கடிகார முள் போல சுழற்றவும்; "ஆன்டி கிளாக்' காகவும் சுழற்றவும்.

* கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால், மணிக்கு ஒரு முறை எழுந்து நில்லுங்கள்; ஒரு நிமிடம், அமைதியாக மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடியுங்கள்; அதிக காபி, டீயை தவிருங்கள்.

* தலைவலி வந்தால், உடனே சில நிமிடம் வெளியில் காலாற நடந்து சென்று வாருங்கள்.

* அடிக்கடி மாத்திரை போடுவதை தவிருங்கள்; அமைதியாக வேலை செய்ய பழகுங்கள்.

* வேலையில் டென்ஷன், பதட்டம் கூடவே கூடாது. மனதில் வேலை செய்யும் எண்ணம் மட்டும் இருக்க வேண்டும்.

24 மணி நேர சட்ட உதவி மையம

உதவிக்கு வரலாமா? : "சட்டம் ஓர் இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் என்பது விளக்கு' என்று சொல்வார்கள். சட்டத்தின் முழுமையான பயன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் www.helplinelaw.com என்ற வெப்சைட் உள்ளது. இந்த வெப்சைட்டில் 24 மணி நேர சட்ட உதவி மையம் செயல்படுகிறது. குடும்ப கோர்ட்டுகளுக்கு இந்த வெப்சைட்டில் முதலிடம் தரப்பட்டுள்ளது.

யாகூவை வாங்கும் திட்டம் : கைவிட்டது மைக்ரோசாப்ட


நியூயார்க்: யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விலை முடிவாகவில்லை என்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முயற்சியைக் கைவிட்டது.யாகூவை வாங்க 4,750 கோடி டாலர் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால், யாகூ நிறுவனம் 5,700 கோடி டாலர் கேட்டது. இதுதொடர்பாக, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவன் ஏ.பால்மெர் மற்றும் யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் இடையே சியாட்டில் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, யாகூவை விலைக்கு வாங்கும் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட் விலகிக் கொண்டது.

முயற்சியில் தோல்வி : கூகுள் சர்ச் இன்ஜினுக்கு சரியான போட்டியாக உள்ள யாகூவை வாங்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிரம் ஆர்வம் காட்டியது. முதலில் 4,460 கோடி டாலர் கொடுக்க தயார் என அறிவித்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தொகையை அதிகரித்தது. ஆனாலும், யாகூ நிறுவனம் எதிர்பார்த்த தொகையை, அது எட்டவில்லை என்பதால், முயற்சியில் தோல்வி கண்டது மைக்ரோசாப்ட்.யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங்கிற்கு, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பால்மர் எழுதியுள்ள கடிதத்தில், "மைக்ரோசாப்ட் நிறுவனம், ஐந்தாயிரம் கோடி டாலர் வரையிலும் தனது தொகையை உயர்த்தித் தர தயாராக இருந்தது.


இது நல்ல விலை என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள யாகூ முன்வரவில்லை. அதனால், மைக்ரோசாப்ட் பங்குதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர பலரின் நலனைக் கருத்தில் கொண்டு, யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்' என தெரிவித்துள்ளார்.

Friday, May 02, 2008

சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை-8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலகின் மிகப்பெரிய கடற்பாலம் திறப்பு!


சீனாவில் இரு நகர‌ங்களு‌க்கு இடையேயான உல‌கி‌ன் ‌மிக ‌நீளமான கட‌ற்பால‌ம் ‌திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

WD36 ‌கி.‌மீ. தூர‌ம் உ‌ள்ள இ‌ந்த ஹேங்ஸூ வளைக்குடாப்பாலம், ஷாங்காயிலிருந்து தொழிற்சாலை நகரமான நிங்போவை கடல் வழியாக இணைக்கிறது. உலகிலேயே மிக நீளமான கடற்பாலம் இதுவே என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

இ‌ந்த இரு நகர‌ங்களு‌க்கு‌ம் இடையே 150 கி.மீ க்கும் மேல் இருந்த சாலை வ‌ழி தூர‌ம் தற்போது இந்த கடற்பாலத்தால் வெறும் 36 கி.மீ. ஆக குறைந்துள்ளது.

இந்த பாலக் கட்டுமானத்தில் தனியார் முதலீட்டாளர்களின் முதலீடுகளும் சேர்ந்துள்ளது. சீன உள்கட்டமைப்பு திட்டத்தில் முதன் முதலாக தனியார் முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


6 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் வாகனங்கள் சுமார் 100 கி.மீ வேகம் வரை செல்லலாம். 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கடற்பாலக் கட்டுமானம் 2003ம் ஆண்டு நவம்பரில் துவங்கியது.

சீனாவில் இதற்கு முன்பு ஷாங்காயிலிருந்து யாங்ஷான் துறைமுகத்தை இணைக்கும் 32.5 கி.மீ. கடற்பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 28, 2008

பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, "பி.எஸ்.எல்.வி.,-சி9' ராக்கெட், இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில், இந்தியாவின், "கார்ட்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.,-1' மற்றும் வெளிநாடுகளின் எட்டு நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தபட்டது. ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விண்வெளி வாகன ஆய்வு மையத்தின் கேன்-எக்ஸ் 2 (ஏழு கிலோ), என்.எல்.எஸ்.,-5 (16 கிலோ), ஜப்பான் டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் கியூட்-1.7 (ஐந்து கிலோ), டென்மார்க் ஆல்பர்க் பல்கலைக் கழகத்தின் ஏ.ஏ.யு.எஸ்.ஏ.டி.,-2 (மூன்று கிலோ), ஜெர்மனி ஆச்சன் அறிவியல் பல்கலைக் கழகத்தின் காம்பஸ்-1 (மூன்று கிலோ), நெதர்லாந்து டெல்பி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் டெல்பி-சி3 (6.5 கிலோ), ஜப்பான் நிகோன் பல்கலைக் கழகத்தின் சீட்ஸ் (மூன்று கிலோ), ஜெர்மனி ஓ.எச்.பி., சிஸ்டம்ஸ் அமைப்பின் ரூபின்-8 (எட்டு கிலோ) ஆகிய எட்டு நானோ செயற்கைக் கோள்களும், "பி.எஸ்.எல்.வி.,-சி9' ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த எட்டு செயற்கைக்கோள்களின் மொத்த எடை 51.5 கிலோ.

பூமியிலிருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் இந்த 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும். இந்த 10 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோ. சென்ற ஆண்டு ஏப்ரலில் ரஷ்யா மொத்தம் 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. இதற்கு அடுத்தபடியாக, தற்போது இந்தியா 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

Tuesday, April 22, 2008

கமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்!



தசாவதாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி, நெகிழ்ச்சியுடன் கலைஞானி கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துப் பாராட்டியுள்ளார்.

தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற 25ம் தேதி பிரமாண்ட மான அளவில் நடைபெறவுள்ளது. ஜாக்கி சான் வந்து ஆடியோவை ரிலீஸ்ச செய்கிறார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரண்டு வருகின்றனர். முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர் விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். உடன், கமல்ஹாசன், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ரஜினிகாந்த் திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் டிவி இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் முதல்வர் கருணாநிதிக்காக பிரத்யேகமாக படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அப்போது கமல்ஹாசனும் உடன் இருந்தார்.

அதில் கமல்ஹாசனின் நடிப்பையும், மேக்கப்பையும் பார்த்து வியந்து போய் விட்டாராம் முதல்வர். இதெல்லாம் உண்மையிலேயே நீங்கள்தான் செய்தததா, நம்பவே முடியவில்லையே, அற்புதமாக இருக்கிறது என்று கமலை பாராட்டியுள்ளார்.மேலும் கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாதடா என்ற வாலியின் பாடலையும் முதல்வர் மிகவும் ரசித்துள்ளார்.

பாடலைப் பார்த்து முடித்ததும், கமல்ஹாசனை கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பாராட்டினாராம்.

வழக்கமாக ஹீரோயின்களுக்கு முத்தமிட்டுத்தான் கமலுக்கு வழக்கம். ஆனால் அவருக்கே முத்தமிட்டு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து விட்டார் கலைஞர்.

Monday, April 21, 2008

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்
சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
ரஜினிகாந்த்http://www.rajinikanth.com/
சூர்யாhttp://www.rssurya.com/
விஜய்http://www.actorvijayonline.com/
அப்பாஸ்http://www.actorabbas.com/
விஜயகாந்த் http://www.indiadirect.com/captain
சரத்குமார்http://www.rskworld.com/
அர்ஜூன்http://arjun.fanspace.com/
பிரபுhttp://www.sivaji-prabhu.com/
மாதவன்http://www.rmadhavan.com/
விக்ரம்http://www.chiyaanvikramonline.com/
பிரசாந்த்http://www.prashanthonthenet.com/
ஜீவாhttp://www.jeeva-online.com/
நடிகைகள்
சிம்ரன்http://www.simplysimran.com/
சினேகாhttp://www.priyamudansneha.com/
அபிராமிhttp://www.abhiramionline.com/
ஐஸ்வர்யாராய்http://www.aishwarya-rai.com/
கிரண்http://www.kiranontheweb.com/
லைலாhttp://www.laila.net/
மீனாhttp://www.meenaonthenet.com/
ஜோதிகாhttp://www.jothikaonline.com/
சங்கவிhttp://www.sangavi.com/
ஸ்வேதாhttp://www.swatheonline.com/
ஷாலினிhttp://www.shalinionline.com/
மும்தாஜ்http://www.mumtazonline.com/
ரீமாசென்http://www.reemasen.com/
அசின்http://www.asinonline.com/
ஷெரீன்http://www.ilamaisherin.com/
நமீதாhttp://www.namitha.info/
மதுமிதாhttp://www.madhumitha.com/
நிலாhttp://www.liveindia.com/meera
இசையமைப்பாளர்கள்
ஹாரிஸ் ஜெயராஜ்http://www.harrisjayaraj.com/
ஏ.ஆர்.ரஹ்மான்http://www.arr4music.com/
வித்யாசாகர் http://vidyasagar.fateback.com/bio.htm
இயக்குனர்கள்
ஷங்கர் www.directorshankar.com/
பாலா www.directorbala.com/

Saturday, April 19, 2008

செவ்வாய் கிரகம் செல்ல குரங்குகளுக்கு பயிற்சி


லண்டன்: செவ்வாய் கிரகத்திற்கு குரங்குகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் விலங்கு என்ற பெருமை குரங்குகளுக்குக் கிடைக்கவுள்ளது.

செவ்வாய் கிரக பயணத்திற்கு தயார் செய்வதற்காக ரஷ்யாவின் கருங்கடல் அருகே உள்ள வெஸ்யோலோயே என்ற இடத்தில் உள்ள சோச்சி மருத்துவ கழகத்தில் 40 குரங்குகள் வளர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு முன்னோட்டமாக இந்த குரங்குகளை அங்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கழகத்தின் இயக்குநர் போரிஸ் லேபின் கூறுகையில், மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே நாய்கள் அல்லது பிற விலங்குகளை வைத்து பரிசோதனை நடத்துவதை விட குரங்குகளை அனுப்புவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு கதிர்வீச்சை சந்திக்க நேரிடும். அதை மனிதர்களால் சமாளிக்க முடியுமா என்பதை அறியவே குரங்குகளை அனுப்பி சோதனை செய்யவுள்ளோம்.

இந்த குரங்குகளுக்கு கதிர்வீச்சு சோதனை, சிறப்பு உணவு, தனிமை, எடைக்குறைவு உள்ளிட்ட பல சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் போரிஸ்.

1983ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு குரங்குகளை அனுப்பியது ரஷ்யா. அதன் பின்னர் 1996ம் ஆண்டுடன் விலங்குகளை அனுப்பும் சோதனையை நிறுத்தியது ரஷ்யா. காரணம், நிதிப் பிரச்சினை.

இந்த நிலையில் செவ்வாய்க்கு குரங்குகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது ரஷ்யா. இருப்பினும் குரங்குகள் செவ்வாய்க்கு செல்ல குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது.

லேட் ஆனாலும் லேட்டஸ்டாக செவ்வாய்க்குப் போகப் போவது முதலில் குரங்குகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, April 18, 2008

நேபாளி - விமர்சனம்!


மீரா ஜாஸ்மினை காதலித்து திருமணம் செய்கிறார் பரத். காமுகன் ஒருவனால் மீரா ஜாஸ்மின் இறக்க நேரிடுகிறது.

காமுகனை பழிவாங்கும் பரத் ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வருகிறவர் நேபாளியாக மாறுவேடம் போட்டு சிட்டியில் உள்ள காமுகர்களை சிரிஞ்ச் வைத்தே கொல்கிறார். தமிழ் சினிமாவின் அஜெண்டாவுக்குள் அடங்கிப் போகும் இந்த நேர்கோட்டுக் கதையை மூன்றாக கூறுபோட்டிருக்கிறார் இயக்குனர் வி.இஸட். துரை. அதனால், ஏன் எதற்கு யார் எப்படி என நிறைய கேள்விகள்.

காரை ஓட்டிக் கொண்டே பரத் காரணத்தைச் சொல்லும்போது திரி பிடுங்கப்பட்ட தீபமாகிறது படம். பரத்துக்கு மூன்று கெட்டப்புகள். உள்ளேன் ஐயா நடிகர்களுக்கு மத்தியில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அந்த நேபாளி இழுத்து இழுத்துப் பேசும்போது நமக்கு சுவாசம் சிக்கிக்கொள்கிறது.

மீரா ஜாஸ்மின் காதலிக்கிறார், கல்யாணம் செய்கிறார், காமுகனால் கற்பு பறிக்கப்படும் முன் தன்னைத்தானே சாகடித்துக் கொள்கிறார். (கதாநாயகி என்றால் உயிரைப் பறித்தாவது அவர்கள் கற்பை இயக்குனர்கள் காப்பாற்றும் மர்மம் தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

One of the Best Mails

One of the Best Mails I have ever read....

The train has started moving. It is packed with people of all ages, mostly with the working men and women and young college guys and gals. Near the window, seated a old man with his 30 year old son. As the train moves by, the son is overwhelmed with joy as he was thrilled with the scenery outside..

"See dad, the scenery of green trees moving away is very beautiful"

This behavior from a thirty year old son made the other people feel strange about him. Every one started murmuring something or other about this son."This guy seems to be a crack.." newly married Anup whispered to his wife.

Suddenly it started raining... Rain drops fell on the travelers through the opened window. The Thirty year old son , filled with joy " see dad, how beautiful the rain is .."

Anup's wife got irritated with the rain drops spoiling her new suit.

Anup ," cant you see its raining, you old man, if ur son is not feeling well get him soon to a mental asylum..and dont disturb public henceforth"

The old man hesitated first and then in a low tone replied " we are on the way back from hospital, my son got discharged today morning , he was a blind by birth, last week only he got his vision, these rain and nature are new to his eyes.. Please forgive us for the inconvenience caused..."

The things we see may be right from our perspective until we know the truth. But when we know the truth our reaction to that will hurt even us. So try to understand the problem better before taking a harsh action

Thursday, April 10, 2008

Friday, March 28, 2008

Cute Babies Part I




























Tuesday, March 04, 2008

Do not use your mobiles especially at Hospitals

This is a real incident that happened in a local hospital in Bangalore, India.

A 4 year old girl was admitted due to leg fracture. As it was an open fracture, she had to undergo an operation to stitch the protruding bone back in place. Though it was quite a minor operation, she was hooked on to life support system, as a part of the process.

The doctors had to input some data prior to the operation to suit different conditions. Thereafter, the operation proceeded. Half way through the process, the life support system suddenly went dead.

The culprit: - Some one was using his/her hand-phone outside the operation theatre. And the frequency had affected the system.
They tried to track the fellow but to no avail. The little girl, young and innocent as she was, died soon after.
"Be compassionate! Do not use your hand phone /mobiles especially at any hospitals or within the Aircraft or any places where you are told not to use it... You might not be caught in the act, but you might have killed someone without knowing". Sometimes it's a matter of Life & Death....!!!!

Thursday, February 28, 2008

Wow! "Because" Triple Beauty

Sentence not ends in a because, Because Because is a Connective Word

காலமானார் எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா 1935ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி சென்னை திரு‌வல்லிகேணியி்ல் பிறந்தார் இளமைக்காலம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கழித்தார்। ஏற்கனவே அவரது பெயரில் எழுத்தாளர் இருந்ததால் தனது மனைவி சுஜாதா பெயரில் கதை எழுதினார் இந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது।

அவர் இது வரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார் இவரது துப்பறியும் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

பாய்ஸ், சிவாஜி, அந்நி‌யன் போன்ற திரைப்படங்களில் வசனம் எழுதியுள்ளார்

உண்மை என்றே நம்பும் அளவிற்கு இவரது துப்பறியும் நாவல்கள் இருந்தன என் இனிய இயந்திரா போன்ற அறிவியல் நாவல்கள் மிகவும் பிரலமாகும்.

Wednesday, February 27, 2008

Google AdSense Details

AdSense Payment Demo

Google AdSense: Tax Information

Which countries have Electronic Funds Transfer supported
Electronic funds transfer is available in the following countries:

AdSense Help Forum

AdSense Help Center

Indian Railways Budget 2008 - 2009



Indian Railway budget 2008 - 2009 announced by Railway Minister

Tuesday, February 26, 2008

Flower of paper

LIC Health Care Plans - LIC Health Plus

Life Insurance Corporation of India has got the Insurance Regulatory and Development Authority’s (IRDA) nod for its health insurance product – LIC Health Plus.

Monday, February 25, 2008

விடியலைத் தேடு!

பறவைகள் பறப்பது விடியலைத் தேடி
பறவையாய்ப் பறந்திடு வாழ்க்கையைத் தேடி
சிறகுகள் முளைப்பது பறந்திடத் தானே
சிறகினை வளர்த்திடு விண்ணிலே பறந்திடு

யாரும் சொல்லாத வார்த்தைகள் தேடு
யாரும் செல்லாத வழியினை நாடு
நேரம் தவறாமல் உழைத்திடப் பழகு
பாரம் இல்லாத வாழ்க்கையே உனது

சிலையாய் இருந்தால் அழகாய் இருப்பாய்
சிற்பியா யிருந்தால் சிலையை வடிப்பாய்
சிலையா யிருந்து ஜொலிப்பதைக் காட்டிலும்
சிற்பியா யிருந்து சிலையினைப் படைத்திடு

கனவுகள் கண்டிடு தூக்கத்தை வென்றிடு
கனவுகள் தானே வாழ்க்கையின் பூஞ்செடி

ஜனனமும் மரணமும் நொடியினில் நிகழ்ந்திடும்
தயக்கமும் மயக்கமும் தினம்தினம் வந்திடும்
எழுச்சியும் மலர்ச்சியும் வாழ்க்கையைத் தந்திடும்

அன்னை

எனது ஜனனத்திற்காக
பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ

உன் விரல்களை பற்றிக் கொண்டு
தான் நடை பழகினேன்
இன்று உனக்கு முன்பாகச்செல்வதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் அசைவுகளைக் கண்டுபேசத் துவங்கியவன்!!
இன்று உன்னை விடவும்பேசுவதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் விரல்களைக் கொண்டுஎழுதப் பழகியவன்
இன்று உன்னை விடவும்எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்!

எத்தனைஇரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...!
வலிகளை மட்டும்கற்றுத் தந்தவன்நான்....

என் வலிகண்டதும்.... - நீஏன்துடிதுடித்துப் போகிறாய்?தாய் என்பதாலா...?