Monday, April 28, 2008

பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, "பி.எஸ்.எல்.வி.,-சி9' ராக்கெட், இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில், இந்தியாவின், "கார்ட்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.,-1' மற்றும் வெளிநாடுகளின் எட்டு நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தபட்டது. ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விண்வெளி வாகன ஆய்வு மையத்தின் கேன்-எக்ஸ் 2 (ஏழு கிலோ), என்.எல்.எஸ்.,-5 (16 கிலோ), ஜப்பான் டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் கியூட்-1.7 (ஐந்து கிலோ), டென்மார்க் ஆல்பர்க் பல்கலைக் கழகத்தின் ஏ.ஏ.யு.எஸ்.ஏ.டி.,-2 (மூன்று கிலோ), ஜெர்மனி ஆச்சன் அறிவியல் பல்கலைக் கழகத்தின் காம்பஸ்-1 (மூன்று கிலோ), நெதர்லாந்து டெல்பி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் டெல்பி-சி3 (6.5 கிலோ), ஜப்பான் நிகோன் பல்கலைக் கழகத்தின் சீட்ஸ் (மூன்று கிலோ), ஜெர்மனி ஓ.எச்.பி., சிஸ்டம்ஸ் அமைப்பின் ரூபின்-8 (எட்டு கிலோ) ஆகிய எட்டு நானோ செயற்கைக் கோள்களும், "பி.எஸ்.எல்.வி.,-சி9' ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த எட்டு செயற்கைக்கோள்களின் மொத்த எடை 51.5 கிலோ.

பூமியிலிருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் இந்த 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும். இந்த 10 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோ. சென்ற ஆண்டு ஏப்ரலில் ரஷ்யா மொத்தம் 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. இதற்கு அடுத்தபடியாக, தற்போது இந்தியா 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

Tuesday, April 22, 2008

கமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்!



தசாவதாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி, நெகிழ்ச்சியுடன் கலைஞானி கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துப் பாராட்டியுள்ளார்.

தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற 25ம் தேதி பிரமாண்ட மான அளவில் நடைபெறவுள்ளது. ஜாக்கி சான் வந்து ஆடியோவை ரிலீஸ்ச செய்கிறார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரண்டு வருகின்றனர். முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர் விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். உடன், கமல்ஹாசன், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ரஜினிகாந்த் திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் டிவி இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் முதல்வர் கருணாநிதிக்காக பிரத்யேகமாக படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அப்போது கமல்ஹாசனும் உடன் இருந்தார்.

அதில் கமல்ஹாசனின் நடிப்பையும், மேக்கப்பையும் பார்த்து வியந்து போய் விட்டாராம் முதல்வர். இதெல்லாம் உண்மையிலேயே நீங்கள்தான் செய்தததா, நம்பவே முடியவில்லையே, அற்புதமாக இருக்கிறது என்று கமலை பாராட்டியுள்ளார்.மேலும் கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாதடா என்ற வாலியின் பாடலையும் முதல்வர் மிகவும் ரசித்துள்ளார்.

பாடலைப் பார்த்து முடித்ததும், கமல்ஹாசனை கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பாராட்டினாராம்.

வழக்கமாக ஹீரோயின்களுக்கு முத்தமிட்டுத்தான் கமலுக்கு வழக்கம். ஆனால் அவருக்கே முத்தமிட்டு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து விட்டார் கலைஞர்.

Monday, April 21, 2008

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்
சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
ரஜினிகாந்த்http://www.rajinikanth.com/
சூர்யாhttp://www.rssurya.com/
விஜய்http://www.actorvijayonline.com/
அப்பாஸ்http://www.actorabbas.com/
விஜயகாந்த் http://www.indiadirect.com/captain
சரத்குமார்http://www.rskworld.com/
அர்ஜூன்http://arjun.fanspace.com/
பிரபுhttp://www.sivaji-prabhu.com/
மாதவன்http://www.rmadhavan.com/
விக்ரம்http://www.chiyaanvikramonline.com/
பிரசாந்த்http://www.prashanthonthenet.com/
ஜீவாhttp://www.jeeva-online.com/
நடிகைகள்
சிம்ரன்http://www.simplysimran.com/
சினேகாhttp://www.priyamudansneha.com/
அபிராமிhttp://www.abhiramionline.com/
ஐஸ்வர்யாராய்http://www.aishwarya-rai.com/
கிரண்http://www.kiranontheweb.com/
லைலாhttp://www.laila.net/
மீனாhttp://www.meenaonthenet.com/
ஜோதிகாhttp://www.jothikaonline.com/
சங்கவிhttp://www.sangavi.com/
ஸ்வேதாhttp://www.swatheonline.com/
ஷாலினிhttp://www.shalinionline.com/
மும்தாஜ்http://www.mumtazonline.com/
ரீமாசென்http://www.reemasen.com/
அசின்http://www.asinonline.com/
ஷெரீன்http://www.ilamaisherin.com/
நமீதாhttp://www.namitha.info/
மதுமிதாhttp://www.madhumitha.com/
நிலாhttp://www.liveindia.com/meera
இசையமைப்பாளர்கள்
ஹாரிஸ் ஜெயராஜ்http://www.harrisjayaraj.com/
ஏ.ஆர்.ரஹ்மான்http://www.arr4music.com/
வித்யாசாகர் http://vidyasagar.fateback.com/bio.htm
இயக்குனர்கள்
ஷங்கர் www.directorshankar.com/
பாலா www.directorbala.com/

Saturday, April 19, 2008

செவ்வாய் கிரகம் செல்ல குரங்குகளுக்கு பயிற்சி


லண்டன்: செவ்வாய் கிரகத்திற்கு குரங்குகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் விலங்கு என்ற பெருமை குரங்குகளுக்குக் கிடைக்கவுள்ளது.

செவ்வாய் கிரக பயணத்திற்கு தயார் செய்வதற்காக ரஷ்யாவின் கருங்கடல் அருகே உள்ள வெஸ்யோலோயே என்ற இடத்தில் உள்ள சோச்சி மருத்துவ கழகத்தில் 40 குரங்குகள் வளர்க்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு முன்னோட்டமாக இந்த குரங்குகளை அங்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கழகத்தின் இயக்குநர் போரிஸ் லேபின் கூறுகையில், மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே நாய்கள் அல்லது பிற விலங்குகளை வைத்து பரிசோதனை நடத்துவதை விட குரங்குகளை அனுப்புவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு கதிர்வீச்சை சந்திக்க நேரிடும். அதை மனிதர்களால் சமாளிக்க முடியுமா என்பதை அறியவே குரங்குகளை அனுப்பி சோதனை செய்யவுள்ளோம்.

இந்த குரங்குகளுக்கு கதிர்வீச்சு சோதனை, சிறப்பு உணவு, தனிமை, எடைக்குறைவு உள்ளிட்ட பல சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் போரிஸ்.

1983ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு குரங்குகளை அனுப்பியது ரஷ்யா. அதன் பின்னர் 1996ம் ஆண்டுடன் விலங்குகளை அனுப்பும் சோதனையை நிறுத்தியது ரஷ்யா. காரணம், நிதிப் பிரச்சினை.

இந்த நிலையில் செவ்வாய்க்கு குரங்குகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது ரஷ்யா. இருப்பினும் குரங்குகள் செவ்வாய்க்கு செல்ல குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது.

லேட் ஆனாலும் லேட்டஸ்டாக செவ்வாய்க்குப் போகப் போவது முதலில் குரங்குகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, April 18, 2008

நேபாளி - விமர்சனம்!


மீரா ஜாஸ்மினை காதலித்து திருமணம் செய்கிறார் பரத். காமுகன் ஒருவனால் மீரா ஜாஸ்மின் இறக்க நேரிடுகிறது.

காமுகனை பழிவாங்கும் பரத் ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வருகிறவர் நேபாளியாக மாறுவேடம் போட்டு சிட்டியில் உள்ள காமுகர்களை சிரிஞ்ச் வைத்தே கொல்கிறார். தமிழ் சினிமாவின் அஜெண்டாவுக்குள் அடங்கிப் போகும் இந்த நேர்கோட்டுக் கதையை மூன்றாக கூறுபோட்டிருக்கிறார் இயக்குனர் வி.இஸட். துரை. அதனால், ஏன் எதற்கு யார் எப்படி என நிறைய கேள்விகள்.

காரை ஓட்டிக் கொண்டே பரத் காரணத்தைச் சொல்லும்போது திரி பிடுங்கப்பட்ட தீபமாகிறது படம். பரத்துக்கு மூன்று கெட்டப்புகள். உள்ளேன் ஐயா நடிகர்களுக்கு மத்தியில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அந்த நேபாளி இழுத்து இழுத்துப் பேசும்போது நமக்கு சுவாசம் சிக்கிக்கொள்கிறது.

மீரா ஜாஸ்மின் காதலிக்கிறார், கல்யாணம் செய்கிறார், காமுகனால் கற்பு பறிக்கப்படும் முன் தன்னைத்தானே சாகடித்துக் கொள்கிறார். (கதாநாயகி என்றால் உயிரைப் பறித்தாவது அவர்கள் கற்பை இயக்குனர்கள் காப்பாற்றும் மர்மம் தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

One of the Best Mails

One of the Best Mails I have ever read....

The train has started moving. It is packed with people of all ages, mostly with the working men and women and young college guys and gals. Near the window, seated a old man with his 30 year old son. As the train moves by, the son is overwhelmed with joy as he was thrilled with the scenery outside..

"See dad, the scenery of green trees moving away is very beautiful"

This behavior from a thirty year old son made the other people feel strange about him. Every one started murmuring something or other about this son."This guy seems to be a crack.." newly married Anup whispered to his wife.

Suddenly it started raining... Rain drops fell on the travelers through the opened window. The Thirty year old son , filled with joy " see dad, how beautiful the rain is .."

Anup's wife got irritated with the rain drops spoiling her new suit.

Anup ," cant you see its raining, you old man, if ur son is not feeling well get him soon to a mental asylum..and dont disturb public henceforth"

The old man hesitated first and then in a low tone replied " we are on the way back from hospital, my son got discharged today morning , he was a blind by birth, last week only he got his vision, these rain and nature are new to his eyes.. Please forgive us for the inconvenience caused..."

The things we see may be right from our perspective until we know the truth. But when we know the truth our reaction to that will hurt even us. So try to understand the problem better before taking a harsh action

Thursday, April 10, 2008